Archive for March, 2010
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவை இலங்கை அரசு நிராகரித்தது
by Natkeeran on Mar.12, 2010, under Uncategorized
இலங்கையில் நடந்த கடசிப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்க என ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு ஒன்று திட்டமிடப்படுவதாக பான் கி மூன் தெரிவித்தார். இதை இலங்கை அரசு தேவை அற்ற தலையீடாக நிராகரித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் புலி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்படும் விசமப் பிரச்சாரம் என்றும் இலங்கை சனாதிபதி கூறினார்.