கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்
ஊடகச் சுதந்திரம் மீறப்படல்: ரொறன்ரோ உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டது
by Natkeeran on Feb.23, 2010, under ஊடகச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்
ரொறன்ரோவில் வெளிவரும் வாரந்த தமிழ் பத்திரிகை உதயன் அலுவலகம் இனம் தெரியாத குழுவால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. செய்திகளின் படி இலங்கை – கனடா வணிகப் பேரவயின் தலைவர் செல்லத்துரை இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்சவை சந்தித்து பேசிய செய்தி முதற்பக்கத்தில் வெளிவந்ததால் இது நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கனடாவில் நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மான தேர்தல் பற்றியும் உதயன் முக்கியத்துவம் தந்து செய்தி வெளியிடாதால், அப்பத்திரிகை முன்னர் தமிழ்க் சில தமிழ் கடைகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் பாரிய மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சுத் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரங்களுக்குகாகப் போராடுபவர்கள். குறிப்பாக கனடா நாட்டில் இச் சுதந்திரங்களுக்கு தரப்படும் மதிப்பை நாம் அறிவோம். அப்படி இருந்தும், நம்மில் சிலர் இந்த மாதிரி மனித உரிமைக் குற்றச் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியது, கண்டிப்புக்குரியது. மனித உரிமைகளுக்கான விழுப்புணர்வும் போராட்டமும் உள்ளே இருந்து எழ வேண்டும்.